Friday, January 25, 2019

தேர்தல் முறையிலுள்ள சர்ச்சையை ஆயுதமாக்கி, அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு வருகின்றது. - விஜித ஹேரத்.

தேர்தல் முறையிலுள்ள சர்ச்சையை ஆயுதமாக்கிக் கொண்டு, தற்போதைய அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு வருவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கெடுத்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தலை பிற்போடுவதே, அரசாங்கத்தின் உண்மையான தேவையாகவுள்ளது. அரசாங்கத்திற்கு உண்மையான தேவை என்ற ஒன்று இருந்தால், உடனடியாக தேர்தலை நடத்தலாம்.

ஆனால், தேர்தல் முறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு தற்போதைய அரசாங்கம், தேர்தலை பிற்போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் எந்த முறையிலான தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்வ தாம் தயாராகவே உள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் எவ்வித தொழில்நுட்ப ரீதியான பிரச்சினையும் இல்லை. முதலில் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதை விடுத்து மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவது நாட்டிற்கு நல்லதல்ல.

அரசியல் அதிகார போராட்டத்தில் மூழ்கி, மக்களின் வாக்குரிமையை மறுக்க வேண்டாம். தேர்தலை துரித கதியில் நடத்துவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தேர்தல் தாமதமடைவதால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com