பெருமளவான வெடிபொருட்கள், மன்னார் காட்டுப் பகுதியில் இருந்து மீட்பு.
பெருமளவு வெடிபொருட்கள், மன்னார் காட்டுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேசாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார், பேசாலை நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்தே இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காட்டுப் பகுதியில் மர்மப் பொருட்கள் காணப்படுவதாக,பொதுமக்களில் ஒருவர் பேசாலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற பேசாலை காவல்துறையினர், கிளைமோர் 1, ஜெரற்னைட் 04, துப்பாக்கி மற்றும் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று குறிப்பிட்ட பேசாலை காவல்துறையினர், இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment