தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் அதிகரிப்பு - 28 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனைத்தை அதிகரிக்க, முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பது குறித்து, இன்று முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம்,தொழில் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு முதலானவற்றின் முக்கிய பிரதிநிதிகள், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை வேதனைத்தை, 700 ரூபாவாக உயர்த்த முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வெளியிட்டதாக, ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அத்துடன் நாளொன்றுக்கு மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்து கிலோ ஒன்றுக்காக, 40 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பலரும் எதிர்பார்த்துள்ள இந்த கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்க்கிழமை ,கைச்சாத்திடப்படும் எனவும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment