Thursday, January 31, 2019

சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டு செல்ல முற்பட்ட சிறைச்சாலை சார்ஜன்ட கைது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர் சிறைச்சாலையினுள் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு செல்ல முற்பட்டபோது, வாயிலிலுள்ள சிறைக்காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சார்ஜன்ட் மீது சந்தேகம் கொண்ட வாயில் காவலர்கள் மேற்கொண்ட உடல் பரிசோதனையின்போது, 20 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சார்ஜன்டின் பொருட்கள் உள்ள பெட்டியை சிறைச்சாலை அலுவலகத்தில் சோதனை செய்த அதிகாரிகள் 85 ரூபா பணத்தையும் 2 தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சார்ஜன்ட பொரளை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்துரைத்துள்ள சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கொரல : இவ்வாறு சட்டத்தையும் ஒழுங்கையும் மீறுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களது பதவி நிலைகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையினுள் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதுடன் நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்கள் சிறைச்சாலையினுள் இருந்தவாறே இயக்கப்படுகின்றது யாவரும் அறிந்த விடயம். இவ்வாறான சட்டவிரோத செயல்கள் சிறைச்சாலை உத்தியோகித்தர்களின் பூணர ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் பலத்துவரும் நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com