Thursday, January 31, 2019

கிளிநொச்சியில், போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகி வருவதாக, உளநல மருத்துவர் ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில், விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று விசேட இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே, உளநல மருத்துவர் ஜெயராஜா இதனை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்புறப் பாடசாலைகள் சிலவற்றிற்கு அண்மையில் போதைப்பொருள் பாவனை தொடர்பிலான விழிப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகளவில் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டது.

சில மாணவர்கள் வகுப்பறையிலேயே போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுகின்றமையும் தெரிய வந்துள்ளது.

கஞ்சா மற்றும் ஏனைய போதையை ஏற்படுத்தம் ஒரு வகையான பாக்கு போன்றவற்றின் பாவனையும் மாணவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளும் மௌனமாகவே உள்ளனர். மாணவர்கள் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டால், பல்கலைக்கழ அனுமதியில் பாரிய தாக்கம் ஏற்படும். எனவே மாணவர்கள் இவ்வாறான பழக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என உளநல மருத்துவர் ஜெயராஜா மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com