Thursday, January 31, 2019

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகல்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான மனு மீதான விசாரணையிலிருந்து நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணத்தினால் அவ் வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதமருக்கு எதிரான வழக்கு விசாரணைகளிலிருந்து நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளதால்,அந்த இடத்திற்கு வேறொரு நீதிபதிகள் குழாம் முன்னின்று இந்த வலக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி பணம் ஈட்டும் வரையறுக்கப்பட்ட லேக் ஹவுஸ் அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் தனியார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதனால், அவரால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என தெரிவித்து, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோனவல, பிரதமருக்கு எதிரான மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com