Monday, January 21, 2019

ஹெரோயினை விற்பனை செய்த பெண் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை.

ஹெரோயினை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இரண்டு கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயினை வைத்திருந்து விற்பனை செய்தமை காரணமாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால், பொரளை – பேஸ்லைன் வீதியில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தார். குறித்த பெண் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதால், இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும், வெவ்வேறாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த 54 வயதான பெண் குற்றவாளி, 4 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com