Monday, January 21, 2019

மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள எபோலா - இதுவரை 370 பேர் பலி.

சுமார் 370 பேர் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, இதுவரை பலியானதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கோ சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தற்போது 360 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் எபோலா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 685 பேரில் 636 பேருக்கு, இந்த நோய் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட 245 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காங்கோ நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில் எபாலோ வைரஸ் காய்ச்சலுக்கு 15,145 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 5,420 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com