Monday, January 21, 2019

இரண்டரை மாத பெண் சிசுவொன்று, மட்டக்களப்பு – கிரான் பகுதியில் மீட்பு.

கைவிடப்பட்டிருந்த இரண்டரை மாத பெண் சிசு ஒன்றை மட்டக்களப்பு – கிரான் வீதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த சிசுவை சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலீசாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து, கிரான் முருகன் கோவில் வீதிப்பகுதியில் இருந்து, நேற்றிரவு குறித்த சிசு மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றிரவு 10 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலேயே சிசு, அந்த வீதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com