Monday, January 21, 2019

நெடுங்கேணியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் பலி - இருவர் கவலைக்கிடம்.

நெடுங்கேணியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதுடன், நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ராணுவ அதிகாரிகள் இருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு, முல்லைத்தீவு - தட்டாமலை நோக்கி பயணமான இலங்கை ராணுவத்திற்குச் சொந்தமான ஜீப் ரக வாகனம் ஒன்றே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.

வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நால்வரில், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com