Monday, January 21, 2019

சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நட்டஈடு - விவசாய அமைச்சு

கடந்த தினம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்களை படைப்புழு சூறையாடி சென்றுள்ள நிலையில், படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேனா என்று அறியப்படும் இந்த படைப்புழுவின் தாக்கம் காரணமாக, சுமார் 48000 ஹெக்டேயர் நிலபரப்பில் பயிரப்பட்டிருந்த சோளப்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் சேனா படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாய செய்கையானது முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பின், அதை முழுமையாக தீயிட்டு எரிக்குமாறும் விவசாய அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் சேனா படைப்புழுவை ஒழிப்பதற்காக மாவட்ட மாட்டத்தில் விவசாய மத்திய குழு, கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குழு மற்றும் மாவட்ட குழு போன்ற மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சேனா படைப்புழுவை ஒழிப்பதற்கான பூச்சுக்கொல்லியை பல்கலைக்கழக மாணவர் ஒருவர், நேற்றைய தினம் கண்டுபிடித்திருந்தார்.

இந்த பூச்சிக்கொல்லியின் மூலம் சேனா பட்டுப்புழு அழிக்கப்படும் என குறித்த மாணவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த பூச்சிக்கொல்லியின் மூலம் சூழலுக்கோ, மனிதர்களுக்கோ, உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என குறித்த பல்கலைக்கழக மாணவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி, புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை சமுர்த்தி பணியாளர்களை கொண்டு முன்னெடுக்கவுள்ளதாக, அமைச்சர் தயா கமகே கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com