Tuesday, January 22, 2019

சமூக வலைத்தளமான Whatsapp எடுத்த அதிரடி நடவடிக்கை

Whatsapp நிறுவனம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. செய்தி ஒன்றை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளது. இந்த புதிய கட்டுப்பாட்டின் மூலம் போலியான செய்திகள் வேகமாக பரவுவதை தடுக்க முடியும் என்று நம்பப்படுகின்றது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு தற்போது உலக அளவில் செயற்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் போலியான செய்திகள் மற்றும் தகவல்களை கண்டறியும் நோக்கில் ஒரு தகவல் எங்கிருந்து வருகிறது? யார் அனுப்புகிறார்கள்? யாரால் பரப்பப்படுகின்றது என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருவதாகவும் Whatsapp நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதனால், சமூக வலை தளமான Whatsapp மூலம் பகிரப்படும் செய்திகள் பொய்யாக பிழையாக இருந்தால் அவற்றுக்கு உரிய நடவடிக்கையை நிறுவனம் மேற்கொள்ளும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com