மனித எச்ச மாதிரிகள் பீட்டாவிடம் ஒப்படைப்பு
மன்னாரில் மீட்கப்பட்ட மனிதப் எச்சங்களின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்திடம் கார்பன் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்களில் மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து 294 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றில் தெரிவு செய்யப்பட்ட 6 மாதிரிகள் மட்டுமே மேலதிக ஆய்வுகளுக்காக அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டன. அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறித்த 6 மாதிரிகளும் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை கண்டறியும் ஆராய்வு எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவை தொடை எலும்பு மற்றும் பற்களின் மாதிரிகள் ஆகும். இந்த நிலையில் கார்பன் பரிசோதனை முடிவுகள் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த 6 மாதிரிகளை கொண்டு மன்னார் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ, காணாமற்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் மிராக் ரஹீம் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளார்கள்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜராகும் சட்டத்தரணிகளான வி.நிரஞ்சன், ரனித்தா மயூரன் ஆகியோரும் அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment