போக்குவரத்தில் ஈடுபட்ட பஸ் திடீர் தீக்கீரை
கண்டி – கம்பளை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ் ஒன்று இன்று பிற்பகல் திடீரென தீப்பிடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பஸ் போக்குவரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில் கம்பளை – கொஸ்ஹின்ன பிரதேசத்தில் தீப்பரவலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீப்பரவல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment