Sunday, January 6, 2019

பிரபுக்கள் பாதுபாப்பு ஆபத்தான கட்டத்தில்.

பிரபுக்கள் பாதுகாப்புக்குரிய பயிற்சிகளை பெற்றுக்கொள்ளாத பாதுகாப்பு உத்தியோகித்தர்கள் பலர் தற்போது பிரபுக்கள் பாதுகாப்பு சேவையில் உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது. பிரபுக்களே இவ்வாறானவர்களை தெரிந்தெடுப்பதாகவும் இதனால் பொலிஸ் தலைமையகம் சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.

பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்கள் மாதம் ஒருமுறை சிறந்த உடற்பயிற்சி மற்றும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி என்பவற்றிற்கு செல்லவேண்டிய நிபந்தனை உள்ள நிலையில், அமைச்சர்களால் தமது விருப்பு ஏற்றவாறு இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்கள் இவ்வாறான பயிற்சிகளுக்கு செல்வதில்லை என்றும் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

அத்துடன் தற்போது பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்கள் ஆபத்துக்களின்போது தங்களையே தப்பவைத்துக் கொள்ள முடியாத குண்டர்களாக காணப்படுவதுடன் பலரது வயது 50 ஐயும் தாண்டி விட்டதாக அறியமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com