மஹிந்தவை பிரதமராக்கும் நடவடிக்கையை நான் கைவிடவில்லை. மைத்திரிபால சிறிசேன.
இந்நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமிக்கும் தனது நோக்கத்தை இன்னும் கைவிடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களை சந்தித்து பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் பொருட்டு சக்தி மிக்க கூட்டணி ஒன்றை அமைத்து அந்த இலக்கை அடைவதற்கான சகல நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் ஒரு சிலர் கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் இணை முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு அக்கருமத்தை மேற்கொள்ள இடமளியேன் என்றும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அதற்கு பதிலாக தாம் சக்தி மிக்க கூட்டணியை அமைத்து அரசமைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயமானது தனக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்ற காரியாலயமாக கடந்த காலங்களில் செயற்பட்டதாகவும் அவ்வாறு செயற்பட்ட ஒரு சிலர் மைத்திரிபால சிறிசேன என்ற நபர்தான் இக்கட்சியில் தலைவர் என்பதை மறந்திருந்தார்கள் என்றும் கர்ச்சித்துள்ளார்.
0 comments :
Post a Comment