359 ரூபாவால் அதிகரிக்கப்படுமா? - வருட ஆரம்பத்தில் நுகர்வோர் எதிர்நோக்கி இருக்கும் சிக்கல்
சமையல் எரிவாயுவின் விலையை 359 ரூபாவால் அதிகரிப்பதற்கான வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கோரிக்கை, சமையல் எரிவாயு நிறுவனங்களினால் நுகர்வோர் அதிகார சபையிடம் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 359.00 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் ஒருமுறை சமையல் எரிவாயு தொடர்பிலான விலை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளுக்கு நுகர்வோர் அதிகார சபை இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment