Sunday, January 6, 2019

எதிர்கட்சி தலைவர் என்ற வகையில் காரியாலயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சேவையை செய்வேன். மஹிந்த

காரியாலயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதிர் கட்சி தலைவர் என்ற வகையில் எனது செயற்பாடுகளை முன்னெடுபேன் என முன்னால் ஜனாதிபதியும் எதிர் கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர்:

எதிர் வரும் தேர்தலில் ஸ்ரீ.சு.கட்சியும் ஸ்ரீ.பெ.பெரமுனவும் ஒன்றிணைந்து ஐ.தே.கட்சிக்கு எதிராக தேர்தல் களத்தில் செயற்படுவோம். எதிர்கட்சி காரியாலயம் இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் முறைக்கோடன நடவடிக்கைகளை முறியடிக்க எதிர்கட்சி தலைவராக செயற்பட நான் ஒரு போதும் பின் வாங்க போவதில்லை.

இவ்வருடம் முழுதும் தேர்தல் இடம் பெறும் வருடமாகவே உள்ளது. இதனால் கட்சியின் செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டியுள்ளது. 50 நாட்களுள் அரசாங்கத்தில் ஏற்படுத்திய மாற்றத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளோம்.

நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற வேளையில் சார்பான எதிரான வாதங்கள் வெளிவந்தன. இதேவேளை நாட்டின் விமான நிலையம் துறைமுகம் வங்கி ஆகியவற்றை விற்கின்றனர். இன்னும் விற்க ஏற்பாடுகள் நடைப்பெறுகின்றன. இதுமட்டுமல்லாமல் பெடரல் அரசாங்க முறைமையை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ.சு.கட்சி ஐ.தே.கட்சியுடன் இணைந்திருந்தமையினாலேயே இவர்களுக்கு இலகுவாக பெரும்பான்மை பெற முடிந்தது. ஆனால் இன்று ஸ்ரீ..சு.கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளமையான எமக்கு மாபெரும் வெற்றியாகும்.

இன்று பிரதமர் நாம் அரசாங்கத்தை ஏற்ற 50 நாட்களுக்குள் 8 பில்லியன் ரூபா செலவளித்துள்ளதாக கூறுகிறார். மக்கள் மத்தியில் இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டு கொள்கின்றோம்' என அவர் கூறியிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com