Friday, January 25, 2019

காதலியை கர்பிணியாக்கி , நிறை வயிற்றில் மண்வெட்டி பிடியால் போட்டு பிடித்த காதலன். சாவகச்சேரியில் சம்பவம்.

மண்வெட்டி பிடியினால் தாக்குதலுக்கு இலக்கான நிறைமாத கர்ப்பிணி வயிறு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று (24)மாலை குறித்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது ,

தாக்குதலுக்கு இலக்கான பெண்ணும் , தாக்குதல் நடத்தியவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் , குறித்த பெண் கர்ப்பம் அடைந்த நிலையில் பெண்ணை காதலன் கைவிட்டு சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று மாலை குறித்த பெண் வீதியால் சென்று கொண்டிருந்த போது , வழிமறித்த முன்னாள் காதலன் மண் வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண் வீதியில் சுருண்டு விழுந்து கதறியதை அடுத்து வீதியால் சென்றவர்கள் அப்பெண்ணை மீட்டு நோயாளர் காவு வண்டி மூலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கான பெண் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் தாக்குதலாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com