Friday, January 25, 2019

கிழக்கின் காணிகளை ஊவாவுக்கு கொடுத்து புத்தளத்தை வடக்குடன் இணைக்க விக்கி ஆலோசனை.

தமிழ் தேசியக் கூட்டணி என்ற அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள விக்கினேஸ்வரன் வட-கிழக்கு இணைக்கப்படவேண்டும் என தான் விரும்புவதாகவும், அவ்வாறு அது இணைகின்றபோ கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை சிங்கள மாகாணங்களுடன் இணைத்து விடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது கட்சியை ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றில் மேற்படி ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வடகிழக்கை எவ்வாறு இணைக்கலாம்?

'நாம் எமது கட்சி அடிப்படையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களுக்கு தனியொரு அலகை உருவாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தற்போது கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் தமிழ் அலகுடன் அல்லது முஸ்லிம் அலகுடன் சேரலாம். தமிழ் மொழிக்கே இரு அலகுகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படும். முஸ்லிம் தமிழ் அலகுகளுக்கிடையில் வரும் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்குத் தேவையான அலகில் சேரவழிவகுக்க வேண்டும்.

இன்னுமொரு யுக்தியைக் கையாளலாம். அம்பாறை மாவட்டத்தில் இருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியையும் லகுகலை உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் ஊவா மாகாணத்துடன் சேர்க்க வேண்டும்.

அதே போல் கோமரன்கடவல உதவி அரசாங்க அதிபர் பிரிவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பிரித்து வடமத்திய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த விதத்தில் கிழக்கில் குடிகொண்டிருக்கும் 75 சதவிகித சிங்கள மக்களை அவர்தம் மக்களுடன் சேர்த்து விடலாம். அதன் பின்னர் வடக்கையும் கிழக்கையும் இணைக்கலாம்.

இதனால் ஏற்படும் காணி நஷ்டத்தைப் புத்தளம் மாவட்டத்தை வடமாகாணத்துடன் சேர்ப்பதன் மூலம் ஈடு செய்யலாம்.

கண்டிய மன்னர் காலத்தில் புத்தளம் தெமள ஹத்பத்து என்றே அழைக்கப்பட்டு வந்து. 'தமிழர் வாழ் ஏழு பற்றுக்கள்' என்பதே அதன் பொருள். புத்தளம் வாழ் மக்கள் தமிழ்ப் பேசும் மக்களே. இணைப்பின் பின் பொது எல்லைகள் இல்லாத ஒரு அலகாக பாரம்பரிய முஸ்லிம் இடங்கள் வடகிழக்கினுள் ஒரு அலகாக்கப்படலாம்
என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கினேஸ்வரனின் மேற்படி அறிக்கையானது யாழ் மேலாதிக்கத்தின் கோரமுகத்தை வெளிக்காட்டியுள்ளதுடன் இவர்களின் அதிகார வெறி கிழக்கு மக்களை விலைகூறி அடிமாட்டுக்கு விற்க தயார் நிலையில் உள்ளது என்பதை வெளிக்காட்டுகின்றது.

கிழக்கின் மக்களில் பெரும்பகுதியினர் வட-கிழக்கு இணைப்பை விரும்பவில்லை என்பது கடந்தகால ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புக்கள் காண்பித்துள்ளது.

கடந்தகால நிகழ்வுகள் கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையேயான உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்பது யாவரும் அறிந்த விடயம். அத்துடன் அந்த கசப்பான அனுபவங்களின் ஊடாக கிழக்கு மக்கள் கிழக்கில் தங்களுக்கு சிங்கள மக்களே அதிக பாதுகாப்பு என நம்புகின்றனர். கிழக்கில் சிங்கள மக்களின் சிங்கள மக்கள் பலவீனமாகும்போது தமிழரும் மிகப்பலவீனமாக்கப்படுவர் என்பது அவர்களது கணிப்பினூடான அச்சம்.

இந்நிலையில் கிழக்கு தமிழ் மக்களின் காணிகளை பிறமாவட்டங்களுடன் இணைத்து அவர்களை மிகச் சிறுபாண்மையாக்கி நலிவுறச் செய்யும் விக்கினேஸ்வரனின் நயவஞ்சகத் சிந்தனை கண்டனத்திற்குரியதாகும்.

வடக்கு தனியே போதாது வட-கிழக்கை இணைத்து அதற்கு ஒருமுறை முதலமைச்சராக வரவேண்டும் என பேராசைகொள்ளும் விக்கினேஸ்வரன் கிழக்கின் காணிகளை பிற மாகாணங்களுக்கு வழங்கிவிட்டு அதற்கு ஈடாக புத்தளத்தை வடக்குடன் இணைக்க முற்படுவது விக்கினேஸ்வரனின் கிழக்கு மக்கள் தொடர்பான ஏளனப்போக்கை வெளிக்காட்டி நிற்கின்றது. கிழக்கு மக்கள் முட்டாள்கள், யாழ்பாணத்து மேதாவிகளின் பாட்டுக்கு கிழக்கான் ஆடவேண்டும் என நினைக்கும் விக்கினேஸ்வரனுக்கு கிழக்கின் காணிகளை மாற்றானுக்கு கொடுக்கவேண்டும் என சிபார்சு செய்வதற்கு என்ன அருகதை இருக்கின்றது.

விக்கினேஸ்வரனுக்கு கிழக்குடன் சம்பந்தி உறவுதானும் உண்டா என கிழக்கு மக்கள் வேண்டுகின்றனர். அவ்வாறான உறவுகள் விக்கினேஸ்வரனுக்கு கொழுப்பு மாவட்டத்துடனேயே உண்டு.

இதற்கும் அப்பால் கிழக்கிலுள்ள சிங்கள மக்களை அவர்களின் உறவுகளுடன் இணைக்க வேண்டும் என்று விக்கினேஸ்வரன் சிபார்சு செய்யும்போது, கொழும்பில் வாழும் தமிழ் மக்களையும் உடனடியாக வடகிழக்குக்கு அனுப்புமாறு சிங்களவர் கூறுவார்களாயின் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுகின்றது.



குறித்த படம் விக்கினேஸ்வரன் காமச்சுவாமி பிரேமானந்தாவுக்கு புளியங்குளத்தில் கோவில் அமைத்து பூசை செய்யும் காட்சி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com