Monday, January 14, 2019

சுனில் ஹதுன்னெத்தி, ரில்வின் சில்வாவிற்கு நீதிமன்றம் அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவி சஷீ வீரவங்ச தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் சாட்சிகளை முன்வைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி மாதம்6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

அதிசிறந்த இராஜதந்திர கடவுச் சீட்டு மற்றும் சாதாரண கடவுச் சீட்டு என்பவற்றை பெற்றுக்கொளவதற்காக போலியான தகவல்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வழங்கிய குற்றத்திற்காக விமல் வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com