Monday, January 14, 2019

பிரியா குடும்பம் நாடுகடத்தப்படுவார்கள் - அவுஸ்திரேலியா உறுதி

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை குடும்பம் ஒன்றின் நாடுகடத்தல் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று அந்நாடு அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார். அவர்கள் உரிய காலத்தில் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நீண்ட காலமாக வசித்து வந்த பிரியா மற்றும் நடேசலிங்கம் தம்பதிகளும் அவர்களது இரண்டு பிள்ளைகளும் இந்த வருடம் நாடு கடத்தப்படும் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

இந்த இலங்கை குடும்பத்தை நாடுகடத்த வேண்டாம் என்றும், அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோணத்தில் பல்வேறு கோரிக்கைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றன. ஆனாலும் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று உள் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதிபட அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரிஸ்பனில் உள்ள ஊடகம் ஒன்றிருக்கு கருத்து வெளியிட்ட பீட்டர் டட்டன், குறித்த இலங்கை குடும்பம் பல்வேறு நீதிமன்றங்களை நாடியிருந்த போதிலும் நியாயமான ஏதிலிகள் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று சுட்டி காட்டினார். ஆகவே அவர்கள் உரிய நேரத்தில் நாடுகடத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com