Wednesday, January 30, 2019

பதவி விலகுவது தீர்வல்ல - மஹிந்த ராஜபக்ச

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலகுவதன் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால் தான் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் பதில் வழங்கிய போது எதிரிகட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார்.

மஹிந்த தேசப்பிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் தேர்தலை நடாத்துவதற்கே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதன் ஊடாக பிரச்சினை தீரப் போவதில்லை. புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வரையில், பழைய சட்டம் நடைமுறையில் இருக்கும். இதனால், பழைய முறைமைப்படி தேர்தலை நடாத்த வேண்டும். அதற்கான அதிகாரம் மஹிந்த தேசப்பிரியவிடம் உள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com