Wednesday, January 30, 2019

வரலாற்று முக்கியத்துவம் மிகு இடங்களை சேதமாக்குபவர்களுக்கு எதிராக, சட்டத்தில் மாற்றம்

வரலாற்று முக்கியத்துவம் மிகு இடங்கள், தொல்பொருள் பெறுமதி கொண்ட பகுதியில் சேதம் விளைவித்தல் மற்றும் அதன் கௌரவத்தை அழிக்கும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது என்று, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் இடங்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உள்ள சட்டதிட்டங்கள் போதுமானதாகவில்லை. இது தொடர்பான குற்றங்களை செய்பவர்களுக்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். அதுமாத்திரமன்றி, தொல்பொருள் பெறுமதி கொண்ட இடங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் அதனை பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதும் முக்கிய விடயம் என்றும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com