Wednesday, January 30, 2019

மன்னார் சதொச வளாகத்தில் அகழ்வுப்பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

மன்னார் சதொச வளாகத்தில் உள்ள மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. முன்னதாக அங்கிருந்து மீட்கப்பட்ட 6 மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு ஆய்விற்காக சமர்பிக்க சென்றமையால், கடந்த 21 ஆம் திகதி அன்று புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் அமெரிக்கா புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த 25 ஆம் திகதி குறித்த மாதிரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த மாதிரிகள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனையை பீட்டா முன்னெடுக்க உள்ளது. தொடை எலும்பு மற்றும் பற்களின் மாதிரிகளே ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. காபன் பரிசேதனை முடிவுகள் எதிர்வரும் 3 வாரங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 300 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 27 மனித எச்சங்கள் சிறார்களினது என்று அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com