Tuesday, January 29, 2019

நஷ்டயீடு வழங்கப்படும் என உறுதியளித்தவர்கள், இப்போது மௌனம் காத்து வருகின்றனர். - பெருந்தோட்ட விவசாயிகள்.

மழை வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவில் அழிவடைந்த நெற்செய்கைக்கு நஷ்டயீடு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடன்களை பெற்று தமது விவசாயத்தை முன்னெடுத்த மக்கள் தற்போது பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட ஒன்பதாயிரத்து 679 ஏக்கர் நெற்செய்கை வெள்ளத்தினால் அழிவடைந்தது.

அத்துடன் ஒலுமடு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், துணுக்காய் பாண்டியன்குளம், புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு, குமுழமுனை கமக்கார அமைப்பின் கீழான 8 ஆயிரத்து 531 ஏக்கர் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டுள்ள சோளப்பயிர்செய்கையில், பாதிப்பை ஏற்படுத்தியுள்ள படைப்புழுவின் தாக்கம், தற்போது வாழைத்தோட்டங்களையும் விட்டுவைக்கவில்லை.

இதனை அடுத்து விவசாயிகள் பெரும் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படைப்புழுவின் தாக்கம் விரைவில் மரக்கறிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விவசாய அமைச்சு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மக்களைக் காக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com