Tuesday, January 15, 2019

டக்கிளஸை நம்பவா? சுமந்திரனை நம்பவா? குழப்பத்தில் சிங்கள மக்கள்.

உத்தேச அரசியல் யாப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள „ஒருமித்தநாடு" என்ற சொற்பதம் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒருமித்த நாடு என்பதன் பொருள் ஒற்றையாட்சிதான் என சுமந்திரன் சிங்கள மக்களுக்கு தெரிவித்து அவர்களை சமாதானப்படுத்த முனைகின்றபோது, இல்லவே இல்லை ஒருமித்தநாடு என்பதன் பொருள் சிங்களத்தில் „எக்சத்ரட்ட" அதாவவது „இணைக்கப்பட்ட நாடுகள்" எனத் தெரிவிக்கின்றார் டக்ளஸ் தேவானந்தா.

மேற்படி இரு நபர்களது கூற்றுக்களாலும், குளம்பிப்போயுள்ள சிங்கள மக்கள் இவர்களில் தமிழ் பண்டிதர் யார் என்றும் எவரை எங்களால் நம்ப முடியும் என்ற கேள்வியையும் கேட்கின்றனர்.

அதே நேரம் „ஒருமித்தநாடு" என்றால் சிங்களத்தில் „எக்சத்ரட்ட - இணைக்கப்பட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்கள்" எனவே அது இந்நாட்டில் பெடரலுக்கு வழிவிடுகின்றது. ஆகவே நான் குறித்த உத்தேச வரைபை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் டக்ளஸ் தேவானந்தா அரசியல் யாப்பு மறுசீரமைப்புக் குழுக்கூட்டங்களின்போது, „ஒற்றையாட்சி" என்றே குறிப்பிடுங்கள் என பலமுறை கோரியபோதும், அதற்கு சுமந்திரன் பலத்த எதிர்ப்பை தெரிவித்ததையிட்டு டக்கிளஸ் மனமுடைந்துள்ளதாக அவ்விணையம் மேலும் தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com