Tuesday, January 15, 2019

புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக, உண்ணாவிரதத்தில் குதித்த பௌத்த பிக்கு.

புதிதாக கொண்டு வரப்படவுள்ள அரசியல் அமைப்புக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை அரச மரத்தடியில் இன்றைய தினம் குறித்த உண்ணாவிரதை போராட்டம் பௌத்த பிக்குவால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த தேரரே, இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பினூடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக அமத்த தம்ம தேரர் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையின் கடற்படைத்தளம் அமைக்கும் முயற்சிகளை அமெரிக்கா, நிறுத்த வேண்டும்’ என எழுதப்பட்ட பதாதைகளும், இந்தியாவின் தலையீடுகளுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும், அவர் அமர்ந்துள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com