சரத் என். சில்வாவை விளக்கமளிக்குமாறு உத்தரவு
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவை எதிர்வரும் 07ம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று சரத் என். சில்வாவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை மூத்த பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, பேராசிரியர் ஹேவா வாடுகே சிரில் மற்றும் மூத்த பேராசிரியர் பிரியந்த குணவர்தன ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 03ம் திகதி மருதானையில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வௌியிட்டதாக தெரிவிக்கப்பட்ட து. அத்துடன் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதியும் அவர் இதுபோன்று நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வௌியிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதன் காரணமாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் இந்த கருத்து தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு மனுதாரர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக சட்டமா அதிபரின் ஒத்துழைப்பை பெறுவதாக நீதிபதிகள் குழாம் இன்று தெரிவித்தது. இந்த நிலையில், வழக்கை எதிர்வரும் 07ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்று சரத் என். சில்வாவை நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறும் கட்டளை பிறப்பித்தது.
0 comments :
Post a Comment