Wednesday, January 23, 2019

கொழும்பில் போக்குவரத்தில் ஈடுபடுவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

சுமார் 6 நாட்களுக்கு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர் .

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முன்னெடுக்கப்படும் ஒத்திகைகளுக்காக, இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் காலை 6:30 முதல் பிற்பகல் 1:30 வரையில் இடம்பெறவுள்ளதால், எதிர்வரும் 26, 27 மற்றும் 31 ஆம் திகதிகளிலும், பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரையிலும் இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com