Wednesday, January 23, 2019

போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி பாரிய கவனயீர்ப்பு ஊர்வலம்.

போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி, இன்றைய தினம் வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள், பாரிய கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய அதிபர் ரம்சீன் தலைமையில் இந்த ஊர்வலம் இடம்பெற்றது.

நாடு முழுவதும் அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பாவனையை ஒழிப்பது தொடர்பான, விசேட விழிப்புணர்வு கருத்துரைகளைத் தொடர்ந்து முஸ்லீம் மகாவித்தியாலய முன்றலிலிருந்து. குருமண்காடு சந்திவரை சென்ற இந்த மாணவர் ஊர்வலம், மீண்டும் அங்கிருந்து பாடசாலையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ‘போதை நாட்டுக்கு கேடு’, ‘அதை ஒழிக்க ஒன்றிணைவோம்’, ‘எதிர்கால சந்ததியை வளர்க்க போதையை தடை செய்’, ‘போதை, அது சாவின் பாதை’ போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியதுடன், ஊர்வலத்தில் பங்கெடுத்தவர்கள், சத்தமாக கோஷங்களையும் எழுப்பியயதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தில் மாணவர்களுடன் இணைந்து நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, எம். லிரீப், கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com