Saturday, January 12, 2019

நாட்டை பாதுகாக்க மஹிந்த மீண்டும், ஆட்சிக்கு வரவேண்டும் - ரொஷான் ரணசிங்க.

நாட்டை கட்டியெழுப்ப எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரதீப் எக்னலிகொட ஆகிய ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு காரணமானவர்கள், தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளனர்.

அத்துடன் பேருவளையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு அரசாங்கம் எந்ததொரு விசாரணையையும் இதுவரை மேற்கொள்ளாத நிலையில், மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றதாக அவர் கூறினார்.

நாட்டில் இடம்பெற்ற அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் இந்த அரசாங்கத்தினுள் இருக்கின்றமையாலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்த ரொஷான் ரணசிங்க, நாடு பெரும் பாதிப்பை நோக்கி பயணிப்பதாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆபத்தில் இருந்து நாட்டு மக்கள் தப்பிக்க வேண்டுமாக இருந்தால், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வர வேண்டும். அப்படி நடந்தால் மாத்திரமே இன, மத பேதங்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெறாது நாடு நல்ல வழியில் செல்லும் என அவர் கூறினார்.

நாட்டிற்குள் இலங்கையர் என்ற கோணத்தில் பௌத்தம், முஸ்லிம், கத்தோலிக்கம், இந்து என அனைத்து மதத்தவர்களையும் ஒன்றாக இணைந்து செயற்பட மஹிந்த அரசாங்கத்தால் மட்டுமே முடியும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com