Saturday, January 12, 2019

த.தே.கூபின் ஆதரவு இருக்கும் வரை மட்டுமே ரணில் பிரதமராக இருக்கமுடியும் - கேலி செய்கிறார் தினேஷ்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வருகையை மக்கள் விரும்பவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். கொஸ்கம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கு நாட்டு மக்களிடையே ஆதரவு இல்லை என்று அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும் வரை மாத்திரமே, பிரதமர் பதவியை வகிக்க முடியும் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்காது போனால், நிச்சயமாக பிரமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி இல்லாது போகும் எனவும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com