Thursday, January 24, 2019

உலகின் மாபெரும் இளைஞர்கள் மாநாடு இலங்கையில்

உலகின் மாபெரும் இளைஞர்கள் மாநாடு எதிர்வரும் ஜுலை மாதம் இலங்கையில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. AIESEC இலங்கை அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நான்கு பிரதிநிதிகள், அண்மையில் அமைச்சர் சாகல ரத்னாயக்கவை அலரி மாளிகையில் சந்தித்தது கலந்துரையாடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இளைஞர்களின் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல், கலாச்சார வேறுப்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டல் மற்றும் பூகோள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com