கடந்த நான்கு வருடங்களில் கல்விக்காக, பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன- அகிலாவிராஜ்.
கடந்த நான்கு வருட காலப்பகுதியில் கல்வித் துறையில் பௌதீகம் மற்றம் ஆளணி வளங்களை பெற்றுக் கொடுத்து பாரியளவிலான வேலைத் திட்டங்களை செய்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
காலி சங்கமித்தா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டில் கல்வித்துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பாரிய பொறுப்பு உள்ளது. ஒரு நாட்டின் சிறந்த வளம் கல்வியே.
அந்த கல்வியை மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழங்க கல்வி அமைச்சு சிறப்பான வேலைத்திட்டங்களை வகுத்து, அவற்றை நடைமுறையப்படுத்தி வருகின்றது.
அதன்படியே கடந்த நான்கு வருட காலப்பகுதியில் கல்வித் துறையில் பாரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment