Thursday, January 17, 2019

மே மாதம் முதல் தடை - உணவு கட்டுப்பாட்டு பிரிவு.

கையுறை அணியாமல் உணவுகளை வெறுங்கைகளால் பிடித்து விற்பனை செய்வதை, தடை செய்யவுள்ளதாக உணவு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து, அமுலாகும் என உணவு அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று மாதக் காலப் பகுதிக்குள் பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இது தொடர்பில் விழுப்புணர்வை ஏற்படுத்துமாறு, மாகாண,மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகளுக்கு சிறப்பு ஆலோசணை சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, உணவு கட்டுப்பாட்டு பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஜே.கே ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் சுத்தமான முறையில் உணவுகளை விநியோகிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறி செயல்படும் அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உணவு கட்டுப்பாட்டு பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஜே கே ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com