Thursday, January 31, 2019

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இவ்வாண்டில் கையெழுத்தாகும்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இந்த ஆண்டில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் உள்ள இலங்கையின் தூதரகத்தை மேற்கோளிட்டு China Daily இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவுக்கான இலங்கை தூதரகத்தின் தகவலின் படி, சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை உருவாக்கும் ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைகள் 2017 மார்ச் மாதம் முடிவடைந்து விட்டன.

இந்த நிலையில் உடன்படிக்கை இந்த ஆண்டில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீன சந்தையில் அதன் ஏற்றுமதிகளை விரிவுபடுத்த மிகவும் ஆர்வமாக இலங்கை உள்ளது என, சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்தார்.

அத்துடன் சீனாவின் சர்வதேச இறக்குமதியாளர் எக்ஸ்போ சீன சந்தையில் நுழைவதற்கு, அதன் தயாரிப்புகளுக்கான ஒரு முக்கியமான தளமாக இலங்கை கருதுகிறது என்றும், எக்ஸ்போ மூலம் நாட்டிற்கு அதிக வாய்ப்புகளை கொண்டு வரும் எனவும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com