Thursday, January 31, 2019

யாழ்ப்பாணத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாக, மண்டையன் குழுத் தலைவர் நீலிக்கண்ணீர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருவதாக, தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்பொழுது அவசரகால சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், பொலிஸார் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரென, வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் வெள்ளவத்தை பகுதிகளிலும் வீடுகளில் உள்ளோரின் தகவல்களை பொலிஸார் சேகரித்த போது அதற்கு அமைச்சர் மனோகணேசன் எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸார் தகவல்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என கோரியதை அடுத்து, அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

எனினும் தற்போது கோப்பாய் பொலிஸாரினால் பொது மக்களின் குடும்ப உறவினர்கள் குறித்த தகவல்கள் கோரப்பட்டு வருகின்றன. அவ்வாறு தகவல்களை கோருவதற்கான காரணங்களை பொலிஸ் உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். அதனூடாகவே மக்கள் மத்தியில் தற்போதுள்ள அச்ச நிலைமையை போக்க முடியும் என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் வடக்கிலே கொலை, கொள்ளை, கற்பழிப்புக்க இடம்பெற்று வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்றோர் பொலிஸாரின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்துவதன் ஊடாக சமூக விரோதிகளை ஊக்குவித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நிற்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com