Friday, January 25, 2019

விகாரையொன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்த மாணவர்களுக்கு விசேட அனுமதி

ஹொரவ்பொத்தானையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த கிரலாகல புராதன விகாரையொன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்தமை காரணமாக தொல்பொருள் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


புராதன விகாரையொன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்தமி காரணமாக கைது செய்யப்பட்டுள்ள 8 தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட இறுதி வருட மாணவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று கெப்பத்திகொல்லாவை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

எனினும் குறித்த மாணவர்கள் எண்மரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட இறுதி வருட மாணவர்களாக இருக்கும் நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு கெப்பத்திகொல்லாவை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com