Wednesday, January 2, 2019

அரசியல்வாதிகளை இனிமேல் நம்பப்போவதில்லை. சர்வதேசத்திடம் நீதிகோருகின்றனர்.

தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கும் அரசியல்வாதிகள், இப்போது தம்மைக் கைவிட்டு சென்றுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் எனக் கூறப்படுவோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் எனக் கூறப்படுவோரின் ; உறவினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், அரசியல்வாதிகளை இனி ஒருபோதும் நம்ப மாட்டோம் எனவும், சர்வதேசமே எங்கள் மீது கரிசனை கொண்டு இந்த வருடத்திலாவது, எமது உறவுகளை மீட்டு தர வேண்டும் எனவும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டனர்.

வருடத்தின் முதல் நாளான நேற்று, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, இவர்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர்.

தமது உறவுகளை எப்படியாவது காண வேண்டுமென, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்த வருடத்திலாவது ஏமாற்றம் இன்றி எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்புவதாக தெரிவித்தனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com