ராஜதந்திரங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியமானது - திலக் மாரப்பன.
வெளியுறவு கொள்கைகள் குறித்து அதிகாரிகள், ராஜதந்திரங்களை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமானது என, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டிலுள்ள இலங்கையின் தூதுவர்களுக்கு விடுத்த அறிக்கையொன்றிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது இராஜதந்திர நடவடிக்கைகளை பயன்மிக்கதாகவும், வினைத்திறனுடனும் முன்னெடுக்குமாறு வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அத்துடன் உலக நாடுகளுக்கு இலங்கையை அறிமுகம் செய்யும் புதிய திட்டங்களையும் முன்னெடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பௌத்த மதம், தேயிலை மற்றும் வாசனைத் திரவியங்கள், மாணிக்கக்கல் என்பவற்றுக்கு புகழ்பெற்ற இடம் எமது இலங்கை என்பதை, முழு உலகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் திலக் மாரப்பன, தூதுவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்த பணிகளை முன்னெடுக்கும் போது, அதி நவீன தொடர்பாடல் முறைகளையும், சமூக வலைத்தளங்களையும் உள்ளடக்கியதான செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என, வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தமது அறிக்கையின் மூலம் அறிவுறுத்தல் வழங்கினார்.
இலங்கையின் அபிவிருத்திக்கு தமது அமைச்சினால் சகல முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment