Sunday, January 13, 2019

அரசாங்கத்திற்கு நிபந்தனைகளற்று ஆதரவு வழங்கக்கூடாது . . ரிஎன்ஏ க்கு சுரேஸ் அறிவுரை.

எதிர்வரும் வரவு செலவு திட்ட யோசனையின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவை மட்டுமே அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஷ் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறினார்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதித்து, திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

அதன் பின்னரே அரசாங்கத்திற்கான ஆதரவு தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். விசேடமாக அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் காணிப்பிரச்சனைகள் உள்ளிட்ட தமிழ் மக்களின் முதன்மையான பிரச்சனைகளுக்கு, தீர்வு காணும் வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

அதனை விடுத்து இந்தமுறையும் கூட்டமைப்பு பேரம் பேசும் சந்தர்ப்பத்தை தவற விடுவார்களாயின், எக்காலத்திலும் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் ஏமாற்றமே கிடைக்கும் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்பாடுகள் சரியாக இல்லாவிடின், எதிர்காலத்தில் தமிழர்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதே உண்மையான நிலைப்பாடாகும் என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com