Saturday, January 19, 2019

7 கடைகள் தீக்கிரை - காரணம் ?

இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் பொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில், 7 கடைகள் முற்றாக தீயில் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோர் இணைந்து தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.

இவ்விபத்துச் சம்பவத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com