Saturday, January 19, 2019

வெளிநாடுகளில் 10 இலங்கை மீனவர்கள் கைது

வௌிநாடுகளில் இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்கம் தெரிவித்துள்ளது. கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மசிறி திசேரா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக சேதமடைந்த இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் மாலைத்தீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பெருமளவான இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீள நாட்டிற்கு வரவழைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கைப் பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com