Saturday, January 19, 2019

ஒன்றை ஆட்சிக்குள் அதிகாரப்பகிர்வு சாத்தியம் - பிரதமர்

ஜே.ஆர்.ஜயவர்தன ஒற்றையாட்சியை மாற்றுவதில்லை என்று கூறியதை போன்றே நானும் ஒன்றையாட்சி என்றே கூறுகிறேன். ஆகவே ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை வழங்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யக்கலமுல்ல – கராகொட பூர்வாராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதகுருமாருக்கான விடுதியை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது பிரதமர் மேற்படி தெரிவித்தார். அரசியலமைப்பு வந்தால் நாடு பிளவுபடும் என சிலர் கூறுகின்றனர். நாங்கள் எந்த ஒரு அரசியலமைப்பினையும் தயாரிக்கவில்லை. அரசியலமைப்பு வரைபையே தயாரித்துள்ளோம்.

ஜே.ஆர்.ஜயவர்தன ஒற்றையாட்சியை மாற்றுவதில்லை என்று கூறியதை போன்றே நானும் ஒற்றையாட்சி என்றே கூறுகின்றேன் என்று கூறிய பிரதமர், ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு செல்ல எம்மால் முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com