Saturday, January 19, 2019

பெப் 4 க்குள் ஞானசார தேரர் விடுதலை - துமிந்த

கலகொட அத்தே ஞானசார தேரர் பாரியதொரு குற்றத்தைப் புரிந்தவர் அல்ல, அவர் நாட்டுக்காகவும், இராணுவ வீரர்களுக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்துள்ளாரென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுவிப்பதில்,  எவ்வித தவறும் இல்லை. அவர் நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்தவர். ஆகவே சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரரை விடுவிக்கும்படி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பாரிய இன மோதல்களுக்கு பின்னணிக் காரணியாக செயற்பட்டவர் யார் என்பதை இந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, புத்தி சுவாதீனமுள்ள அனைவரும் அறிந்து வைத்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com