50 வகையான பட்டப்படிப்புக்களை தொடர்வதற்கு கடனுதவி
அரசாங்கம் மாணவர்களின் நன்மை கருதி உயர்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டி இல்லாக் கடன் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த வட்டி வட்டியில்லா கடன் திட்டத்தின் மூலம் உயர்ந்தபட்ச நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறு உயர் கல்வி அமைச்சின் மாணவ கடன் பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் திருமதி சந்திமா ஜானகி தெரிவித்துள்ளார்.
வட்டியில்லா கடன்களை மாணவர்களுக்கு வழங்கி சந்தையில் கேள்வியுடைய பட்டதாரிகளை உருவாக்குவது இதன் இலக்காகும். இதன்படி அரசாங்கத்தினால் சுமார் ஐந்து துறைகளில் 50 வகை பட்டப்படிப்புக்களை தொடர்வதற்கான கடனுதவி வழங்கப்படவிருக்கிறது. இவ்வாறு வழங்கப்படும் கடன்களை மாணவர்கள் தமது கற்றலை மேற்கொள்ளும் காலப்பகுதியில் செலுத்தவேண்டிய நிலை இல்லாத விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்தக் கடன்களை பெற்று பட்டப்படிப்பை பூர்த்திசெய்த மாணவர்கள் ஒருவருடகாலத்திற்குள் தொழிலை பெற்று, தொழில் கிடைத்தவுடன் பெற்றுக்கொண்ட கடனை தவணைக் கொடுப்பனவு முறையில் திருப்பிச் செலுத்த முடியும்.
0 comments :
Post a Comment