7 ஆயிரத்து 420 லீற்றர், எதனோல் போதைப்பொருள் யாழில் மீட்பு
சட்டவிரோத எதனோல் போதைப்பொருள்களை பாரவூர்தியில் கடத்திச்சென்ற இரண்டு பேரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து, எதனோல் போதைப்பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, ஏழாலை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, குறித்த பெருந்தொகையான எதனோல் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மொத்தமாக 372 எதனோல் கான்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒவ்வாரு கான்களிலும் 21 லீற்றர் கொள்ளளவைக் கொண்ட எதனோல் இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக 7 ஆயிரத்து 420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னடுத்துள்ள சுன்னாகம் பொலிஸார், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment