Thursday, January 24, 2019

71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் இம்முறை மாற்றம் - அமைச்சர் வஜிர அபேவர்தன

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம், இந்த வருடம் தேசிய தினமாக கொண்டாப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8ஆம் உறுப்புரைக்கமையவே இம்முறை சுதந்திர தின நிகழ்வை தேசிய தினமாக கொண்டாடவுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினர்.

அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8ஆவது உறுப்புரையில், தேசிய தினம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவால் தேசிய தினம் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com