வாய்தர்க்கத்தில் மனைவியை கொலை செய்த கணவன்
கணவனின் தாக்குதலில் மனைவி ஒருவர் பலியாகிய சம்பவம் றாகம, மெத்தேகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு, மோதலாக மாறியதில் கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனேமுல்ல, மெத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், றாகம மருத்துவமனையில் அனுமதித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நிலையில் கொலைச் சந்தேகநபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment